January 17, 2012

வேண்டுகோள் !!!

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் , வாசகர்ளுக்கும் ,

தற்பொழுது பதிவுலகில் திருட்டு அதிகமாகி கொண்டு இருக்கிறது !!! தயவு செய்து அதை யார் எழுதினாரோ அவருக்கு உரிய மரியாதையை கொடுங்கள் !!!
அவர் தன் சொந்த மூளையை உபயோகப்படுத்தி தான் எழுதியிருக்கிறார் . உங்கள் பதிவு பிரபலமாக அன்றன்றைக்கு பரபரப்பாக இருக்கும் தலைப்புகளில் பதிவு எழுதுங்கள் !! இப்படி பதிவை திருடி போடுவதால் உங்களுக்கு கிடைக்க போவது ஒன்றும் இல்லை , மாறாக உங்கள் மீது சட்டவாரியான நடவடிக்கை எடுக்க அது வழிதோன்றலாக அமையும் .

மேலும் அந்த பதிவை உபயோகப்படுத்தும் முன்பு அந்த ஆசிரியரிடம் மின்னஞ்சல் மூலமாவது அனுமதி வாங்குங்கள் !! இந்த பதிவை நான் எழுத காரணம் , என் நண்பர் ஒருவரின் பதிவு பல வலைத்தளங்களில் அவரது அனுமதியன்றி போடப்பட்டது !! மேலும் அது அவரது படைப்பு என்று மறைக்கப்பட்டது !! சில கடுமையான நடவடிக்கைகளுக்கு பிறகு அது அந்த பக்கங்களிலிருந்து நீக்கப்பட்டது !!!

நீங்கள் ஒரு பதிவிலிருந்து திருடி இருந்தால் தங்கள் மீது DMCA பிரகாரம் தங்கள் மீது நடவடிக்கை எடுக்க படலாம் . எனவே தயவு செய்து திருடாதீர்கள் !!

இது போன்று தங்கள் பதிவு களவாட பட்டிருந்தால் இந்த உரலியில் உள்ள வழிமுறைகளை பின்பற்றவும் http://support.google.com/bin/request.py?hl=en&product=blogger&contact_type=lr_dmca  .

இது சிலருக்கு வேண்டுகோள் !! சிலருக்கு எச்சரிக்கையாகவும் அமையலாம் !!

மேலும் தகவல்களுக்கு இன்னொரு பதிவை கூடிய விரைவில் போடுகிறேன் !!

No comments:

Post a Comment