March 31, 2012

ஏப்ரல் ஃபூல்......

ஏப்ரல் மாசம்னாலே எல்லாருக்கு ஞாபகம் வர்றது மத்தவங்கள முட்டாளாக்குறது தான்.....

முன்னாடிலாம் வீட்ட விட்டு வெளில வர்றப்ப ஏதாச்சும் சின்ன புள்ளைங்க தான் ஏப்ரல் ஃபூல் பண்ணுறன்னு சொல்லிட்டு வந்து நிக்கும் . அந்த புள்ளைங்க மூஞ்சுல சந்தோசத்த பாக்கனுங்கறதுக்காகவே ஏமாறலாம் (சின்ன புள்ளைக்கிட்ட ஏமாந்ததும் இல்லாம சமாளிக்குறத பாரு) . சின்ன புள்ளைங்க நான் சைக்கிள்ள போகுறப்ப எல்லாம் அண்ணே சைக்கிள்ல வீல் சுத்துதுண்ணேன்னு கத்துவாங்க . என்னது என்னோட சைக்கிள் வீல் சுத்துதான்னு நானும் அதிசயமா பார்ப்பேன் . நம்ம சைக்கிள்ல வீல் சுத்துதான்னு , அப்புறம் பாத்தா தான் தெரியும் என் சைக்கிள்லயும் அதிசயமா வீல் சுத்துமுன்னு .

இந்த சின்ன புள்ளைங்க பண்ணுற டார்ச்சர விட அதிகமா டார்ச்சர் பண்ணுறது ஏழு கழுத வயசுக்கு வளந்த பெருசுங்க தான் . நேத்துக்கு ஒரு SMS வந்துச்சு . அதுல பாத்தா “உன்னைய பத்தி இன்னைக்கு தான் எனக்கு தெரிஞ்சுது . இனிமே எனக்கு கால் பண்ணாத , மெசேஜ் பண்ணாத” - இப்படி எழுதியிருந்துச்சு . அப்பாடா தொல்ல ஒழிஞ்சுதேன்னு நிம்மதியா இருந்தன் . பாத்தா மெசேஜ் இன்னும் முடியல , கீழ வேற கண்டினியூ ஆகி இருந்துச்சு . இன்னும் மானாவாரியா திட்டி எழுதியிருக்கும்னு பாத்தா அங்க தாங்க வச்சாங்க ஒரு பெரிய அணுகுண்டே வச்சுருந்தானுங்க . அது என்னான்ன “சும்மா உன்னைய ஏப்ரல் ஃபூல் பண்ணலாம்னு தான் அப்படி அனுப்புனன் . ஹேப்பி ஏப்ரல் ஃபூல்”னு இருந்துச்சு . அட படுபாவிகளா நான் சந்தோச வேற பட்டேனேடான்னு நெனச்சுக்கிட்டன் . சாயங்காலம் என் கேர்ள்பிரண்டுக்கிட்ட இருந்து அதே மாதிரி ஒரு மெசேஜ் வந்துச்சு . “இனிமே நான் உனக்கு மெசேஜ் பண்ண மாட்டன் , நீயும் எனக்கு பண்ணாத”ன்னு . சரி இவளும் ஏப்ரல் ஃபூல் தான் பண்ணுறான்னு நெனச்சுக்கிட்டு சாயங்காலம் தெரியாத்தனமா மெசேஜ் அனுப்புனன் . அப்ப வந்துச்சு பாருங்க மெசேஜ் , நான் ஏண்டா பொறந்தன்னு என்னைய யோசிக்க வைக்கிற அளவுக்கு மானாவாரியா திட்டி அனுப்பி வச்சுருந்தா . இவ காலைல சாதாரணமா தான மெசேஜ் பண்ணான்னு பாத்தா , நான் முன்னாடி சொன்ன மெசேஜ்க்கு மேல வேற எதுவும் காணும் . இன்னுமா புரியல ? அவ என்னோட இனிமே பேசவே மாட்டன்னு மெசேஜ் அனுப்பிருக்கா . அப்ப தான் என் மனசுக்குள்ள வெறும் ஹிட்டு சாங்கா ஓடுது . “நல்ல வேளை நான் பிழைத்து கொண்டேன்” - அப்படின்னு ஜாலிலோ ஜிம்கானா பாட்டு ஓடுறப்ப தான் இன்னொரு மெசேஜ் வந்து தொலைச்சுது . ”சும்மா சொன்னன் டா , உன் கூட பேசாம என்னாட்டி இருக்க முடியாது” . (ம்க்கும் நான் போயிட்டா வேற எவனும் ஈசி பண்ணி விட மாட்டான்னு ஒனக்கும் தெரிஞ்சிருக்கு ) .இப்ப என் மனசுல ஓடுன ஹாப்பி சாங்கு அப்படியே ஆப்பு சாங்கா ஓட ஆரம்பிச்சுடுச்சு “சோதனை மேல் சோதனை போதுமடா சாமி” .

டிஸ்கி : இனிமே மெசேஜ்னு ஏதாச்சும் வந்தா அத முழுசா படிச்சு தொலைக்கனும் , இது எனக்கு மட்டும் இல்லங்க , உங்களுக்கும் தான்

No comments:

Post a Comment