February 29, 2012

பிப்ரவரி 30ம் பல்புகளும்......

நம்ம பசங்களுக்கு பிப்ரவரி மாசம் மட்டும் எங்குட்டு இருந்து இம்புட்டு அறிவு வருதுன்னு தெரியல . நம்மளுக்கு பல்பு (குறிப்பா எனக்கு) கொடுக்குறதுக்குன்னே ஒரு கூட்டம் அலைஞ்சுக்கிட்டு இருக்குது . அப்படி என்னா தான் பல்பு குடுத்தாங்க , குடுக்கபோறாங்கன்னு ஒரு கற்பனை + உண்மை பதிவு .........


நேத்து காலைல 6 மணிக்கு (நம்புங்கப்பா காலைல 6 மணி தான்) நான் எந்திரிச்சப்ப ஒரு எஸ்.எம்.எஸ் வந்துச்சு . அதுல பாத்தா என்னோட குளோஸ் பிரெண்டு திடீர்னு எனக்கு இந்த மாசம் 30ந்தேதி நிச்சயதார்த்தம் கண்டிப்பா வந்துருன்னு மெசேஜ் பண்ணிருந்தான் . சரி நண்பனுக்கு நல்லது நடக்குதேன்னு பார்ட்டி கேக்கலாம்னு (ஆகா நீ நல்லதுன்னு சொன்னப்பவே சுதாரிச்சுருக்கனும்) போன் பண்ணுனன் . போன் பண்ணுனா அவன் ஒரு வார்த்தை சொன்னான் . அத கேட்டு அப்படியே ஷாக் ஆகிட்டேன் நானு . அது என்னான்னா “போடா லூசு , பிப்ரவரிக்கு ஏதுடா 30”ன்னு சொல்லுறான்(பயபுள்ள ஏமாத்திட்டான்) . சரி அப்படியே கொஞ்ச பில்டப் குடுத்து இது மார்ச் மாசம்னு நெனச்சுட்டன்னு சொல்லி நான் போன வைக்கிறதுக்குள்ள நான் பட்ட பாடு சொல்லி தெரியாது........



அதுக்கு அப்புறம் இந்த மாதிரியே எல்லாரும் மெசேஜ் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க . சரி நம்மளும் பண்ணுவோமேன்னு சொல்லிட்டு பண்ணுனா , அதுக்கு வந்த ஒரு ரிப்ளை “அந்த தியாகிக்கு என்னோட வாழ்த்துகள சொல்லிடு” . காலைலயாச்சும் ஒரு பல்பு மட்டும் தான் வாங்குனன் . இப்ப ஒரு ட்யூப்லைட்டையே வாங்கிருக்கன் .


அதோட விடல என்னோட கெரகம் . தெரியாத்தனமா என்னோட லவ்வருக்கு(அட நம்புங்கப்பா) வேற அனுப்பி தொலச்சுட்டன் இந்த மெசேஜ . வழக்கம் போல சாயங்காலம்  காலேஜ் முடிச்சுட்டு(காலேஜ்லேந்து உன்னிய தொரத்தி வுட்டாங்கன்னு சொல்லு) வந்தா 7 மெசேஜ் . எல்லாம் லவ்வர்கிட்டேந்து தான் . எல்லா மெசேஜ்லயும் ”கால் மீ” தான் . அதான் பாத்தன் பாவி இப்பயாச்சும் நீ கால் பண்ணுவன்னு பாத்தா அப்பயும் கால் மீ . சரி போனா போகுதேன்னு (கால் பண்ணலன்னா பிரிஞ்சிருவாளோன்னு ஒரு பயம்) கால் பண்ணுனன் . கால் பண்ணுனா மம்மி ,டாடி பாவம்லாம் போய் ஒன்னு விட்ட அப்பத்தாவலாம் புடிச்சு திட்டுறா . ஒரே பேட் வேர்ட்ஸ் . திடீர்னு கல்யாணம்னு மெசேஜ் அனுப்புனோன பாசத்துல திட்டுறான்னு பாத்தா கடைசியா சொன்னா பாருங்க ஒரு வார்த்தை “உன் மூஞ்சுக்கு எல்லாம் எவண்டா பொண்ணு குடுப்பான் , நானே ஒனக்கு ஓவர் , இதுல இன்னொரு பொண்ணு வேறயா” .ஒடனே கட் பண்ணிட்டனே போன . மனசுக்குள்ள “பாவி மவளே , ஏதோ லவ்வுல போன் பண்ணுறியேன்னு பாத்தா என்னிய கலாய்க்கறதுக்கு போன் பண்ணிருக்கியேடி” . ஹூம் , இதுக்கு நான் அவளுக்கு போன் பண்ணாமையே இருந்துருக்கலாம் . நான் போன பிராக்கெட்டுல சொல்லிருந்த நல்ல விஷயமாச்சும் நடந்து தொலைச்சுருக்கும் .

ஆகவே மக்களே இனிமே மெசேஜ பாத்துட்டு உணர்ச்சிவசப்பட்டு கால் பண்ணுறதுக்கு முன்னாடி காலண்டரையும் கொஞ்சம் பாத்துருங்க . இல்லாட்டி எனக்கு கிடைச்சா மாதிரி உங்களுக்கும் தொடர்ச்சியா பல்பு கிடைக்கும்ங்குறதுல எந்த சந்தேகமும் இல்ல.

டிஸ்கி : இனிமே எந்த மெசேஜ் வந்தாலும் கால் பண்ண மாட்டண்டா (ஏன்னா என்கிட்ட பேலன்ஸ் இல்லடா)

February 28, 2012

கோடி வித் எ கேடி......

இப்ப தமிழ்நாட்டையே கலக்கிக்கிட்டு இருக்குற ஒரு ப்ரொக்ராம் நம்ம விஜய் டிவி நடத்தும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி தான் . அது கலக்கிக்கிட்டு இருக்குறது மக்கள் மனச இல்லைங்க , மக்களோட மூளைய தான் . சில பேருக்கு வயிறு கூட கலங்குதுங்க அந்த ஷோவ பாக்குறப்ப .



இந்த ஷோவ ஆரம்பிக்குறதுக்கு முன்னாடியே இவங்க குடுக்க ஆரம்பிச்ச அலப்பற இருக்குதே சப்பாஆஆஆ........ எப்ப விஜய் டிவி பக்கம் போனாலும் ஒருத்தர் கோட்டு சூட்டு போட்டுகிட்டு வந்து ஆரம்பிச்சுருவாரு , மாற்றம் ஒன்றே மாறாதது .  நல்லா உத்து பாத்தா நம்ம சூர்யா . இவரு போட்டுருக்க கோட்டு ரொம்ப நாறுது .(கோபிநாத்து மாதிரி இவரும் துவைக்க மாட்டாரு போல) . சுருக்கமா சொல்லனும்னா அடுத்த கோட்டு கோபி உருவாகிறார் .  தினம் தினம் இந்த தொல்ல தாங்கல . சீக்கிரம் ஆரம்பிக்குறோம் , சீக்கிரம் ஆரம்பிக்குறோம்னு தான் சொன்னானுங்களே ஒழிய ஆரம்பிக்கலையே . இப்படியே கொஞ்ச நாள் மக்கள் மனச வேவ வச்சுக்கிட்டு இருந்தானுங்க .

அப்புறமா அந்த ஷோவுக்கு ஆளு சேக்க ஆரம்பிச்சுட்டாய்ங்க . அதுக்கு அவங்க கேட்ட கேள்வி என்சைக்ளோபீடியாலயே இல்லன்னா பாத்துக்கோங்க . ஆமாம் , எல்.கே.ஜி புள்ளைக்கு அட்மிஷன் அப்ப வைக்கிற இண்டர்வியூல கேக்குற மாதிரி ஆரம்பிச்சுட்டாங்க கேள்வி கேக்க (உங்கள எல்லாம் பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களாடா) . இன்னும் கொஞ்ச நாள் விட்டுருந்தா எட்டு கால் பூச்சிக்கு எத்தன காலுன்னு கூட கேட்டு தொலச்சுருப்பாங்க . இப்படி கொஞ்ச நாள் கேள்வி கேட்டுக்கிட்டே இருந்தாங்க . நம்ம தமிழ் மக்கள் அறிவை இம்ப்ரூவ் பண்ணாங்களோ இல்லையோ எனக்கு தெரியாது , விஜய் டிவி காரனோட டிஆர்பி ரேட்டிங் நல்லாவே ஏறுனுச்சு . அது மட்டுமில்லாம அப்பாவி புத்திசாலிங்க எஸ்.எம்.எஸ் மூலமா ஆன்சர அனுப்பி அவங்க கல்லாவையும் நல்லாவே கட்டுனாங்க .

அப்புறம் ஒரு வழியா ஷோவையும் ஆரம்பிச்சுட்டாய்ங்க . அதுல கேக்குறானுங்க பாருங்க ஒரு கேள்வி , யெப்பா சாமி இதுக்கு எஸ்.எம்.எஸ் வழியா ஆன்சர் அனுப்ப சொன்ன கேள்வி எவ்வளவோ தேவலாம். காப்பி அடிக்கிறத என்னா சொல்லுவோம்னு கேட்டுட்டு , அதுக்கு நாலு ஆப்சன் வேற , ஈயடிச்சான் காப்பி , நாயடிச்சான் காப்பி , பேயடிச்சான் காப்பின்னு .

இதுல கேள்வி கேட்டா மட்டும் பத்தாதுன்னு வெளாட வந்தவரு எஸ்.டி.டீ , ஐ.எஸ்.டி ய எல்லாம் கேட்டு வேற கடுப்பேத்துறாங்க மை லார்டு .

இதுல கம்ப்யூட்டருக்கு வேற ஒரு பேரு வச்சு தொலச்சுருக்கானுங்க . அது என்னான்னா மிஸ்டர்.ஜீனியஸ் (ஜீனின்னு வந்தோன சக்கரன்னு நெனச்சுக்காதீங்க . அவரு புத்திசாலின்னு சொல்லுறாராம்) . இனிமே தினமும் ஒன்றரை மணி நேரம் அந்த தொல்ல தொடரும் . 

இந்த தொல்ல பத்தாதுன்னு புதுசா ஒரு தொல்ல வேற இருக்குது ,  அது சன் டிவியும் இந்த ப்ரோக்ராமுக்கு ஆப்போசிட்டா (”ஆப்பு”சிட்டா) புதுசா ஒரு நிகழ்ச்சி ஆரம்பிக்கிறாங்களாம் . ஏற்கனவே ஒருத்தன் தாலி அறுக்கறது பத்தாதுன்னு இது வேறயா ??

சரி , நீங்களும் புத்திசாலி ஆக சில கொஸ்டீன்ஸ் , இதுக்கு ஆன்சர் தெரிஞ்சா நீங்களும் வெளாடலாம் கோடி வித் எ கேடி....

1)படையப்பா படத்தின் பெயர் என்ன ?

a) படையப்பா      b) பாட்ஷா      c) அண்ணாமலை      d) சிவாஜி

2 )இந்த படத்தில் இருப்பவர் யார் ?

a) விஜயகாந்த்      b) புரட்சிகலைஞர்      c) தேமுதிக தலைவர்      d) கேப்டன்

3)சதுரம் எந்த வடிவத்தில் இருக்கும் ?

a) கட்டமா      b) வட்டமா      c) கோணலா      d) நீளமா

4)நீங்க யாரு ?

a) நீங்க      b) சூர்யா      c) விஜய்      d) கமல்

5)எட்டுகால் பூச்சிக்கு எத்தன கால் ?

a) 4      b) 3     c) 9      d) 8

இந்த கேள்விக்கெல்லாம் உங்களுக்கு பதில் தெரிஞ்சா ஒடனே உங்க போன எடுங்க , எங்களுக்கு எஸ்.எம்.எஸ்* வழியா அனுப்புங்க . செலெக்ட் ஆனா நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி

* - ஒரு எஸ்.எம்.எஸ் கட்டணம் 10 ரூபாய் மட்டுமே(அடங்கொன்னியா)

டிஸ்கி : இந்த பதிவ படிச்சும் அந்த நிகழ்ச்சில கலந்துக்குவன்னு ஒத்த கால்ல நின்னா உங்களுக்கு ஒன்னே ஒன்னு தான் சொல்ல முடியும் “விதி வலியது”

February 27, 2012

அதிரிபுதிரி.....(01)

பஸ்கி : ஒவ்வொரு வாரமும் அரசியல்ல நடக்குற உட்சபட்ச காமெடி சீன்களின் தொகுப்பு தான் அதிரிபுதிரி . இனி வாராவாரம் கூத்தடிப்போம்

**********************************************************************************

இந்த வாரம் சங்கரன்கோவில் தான் ஹாட் மேட்டரு

நம்ம மாம்பழக்காரரு (அதாங்க ராமதாஸ்) போன வாரம் சும்மா தானுங்க இருந்தாரு , பட் அவரோட புள்ளையாண்டான் மிஸ்டர்.அன்புமணி தான் போன வாரத்து டாக் ஆப் தமிழ்நாடு . அப்படி என்னாத்தய்யா பேசுனாருன்னு கேக்குறீங்களா ??



"ராமதாஸ் தான் உண்மையான தமிழர் - மற்ற அனைவரும் தமிழர் இல்லை"

இது தான் அந்த பயபுள்ள விட்ட ஸ்டேட்மெண்ட்

இதுல ஆரம்பிச்சது தான் கும்மி . அதுக்கு அப்புறம் அவங்க அப்பாவ விட ஓவர் நைட்ல ஒபாமா ஆயிட்டாருங்க . கூடவே அவங்க சங்கட்தோட ட்ரேட்மார்க் டயலாக் “திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது” . இவங்க கூப்புட்டாலும் அவங்க வரமாட்டாங்கன்னு ஊருக்கே தெரியும் .

********************************************************************************** 


நம்ம வடிவேலு திருப்பியும் புதுசா ஆரம்பிச்சுட்டாரு . அரசியல்ல குதிச்சே தீருவன்னு ஒத்த கால்ல நின்னுட்டு இருக்காப்பல புயல் . புயல் கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி பல்பானது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் . இந்த வாட்டி அவரு ட்யூப்லைட்டு ஆவறது அவராட்டியே தடுக்க முடியாது  . இதுல என்னைய யாராட்டியும் தடுக்க முடியாதுன்னு வேற பஞ்ச் !!!

**********************************************************************************

வழக்கம் போல நம்ம காங்கிரஸ் காரங்க நம்பிக்கைய வீணாக்கல , அறிக்கைலாம் விட்டாங்க . அதுல டாப் மோஸ்ட் டயலாக் - “விளம்பரம் இல்லாததால் விலாசம் இல்லாமல் போனோம்” , சொன்னது நம்ம ஞானதேசிகன் . என்னா இருந்தாலும் தங்கபாலு மாதிரி வராதுங்க . இது பத்தாதுன்னு நம்ம ஜி.கே.வாசன் , அதாங்க மத்திய மந்திரி அவரு வேற கான்பிடன்சா சொல்லுறாரு , திமுக ஜெயிக்கும்னு . அப்படியே ஜெயிச்சுட்டாலும் .


இது பத்தாதுன்னு காங்கிரஸ்க்கு இது போதாத காலம் . நம்ம உள்துறை மந்திரி ஏதோ சட்டம் கொண்டு வர்றதா பேச்சு , அதுல சில பல உரிமைகள் பறிபோகுதுன்னு எல்லா முதல்வர்களும் இப்ப அவருக்கு எதிரா திரும்பிருக்காங்க . இப்ப அவரு எல்லாருக்கும் கலைஞர் அளவுக்கு லெட்டர் எழுதிகிட்டு இருக்காரு . இன்னும் கொஞ்ச நாள்ல ப.சி யோட டவுசர் அவிழ்க்கபடும்னு எல்லாரும் ஆவலோட எதிர்பாக்குறாங்க . அவங்க ஆசை நிறைவேறட்டும் .................


**********************************************************************************

நெக்ஸ்ட் ஏரியா நம்ம கேப்டன் . அவரு அம்மாக்கிட்ட சவால் விட்டதுக்குன்னே தனியா வேற நிக்குறாரு . பிரச்சாரத்துக்கு போய்யான்னா குடும்பத்தோட ஏதோ பிக்னிக் போறா மாதிரியே போறாரு , கேட்டா கூட்டுறவே நாட்டுயர்வுன்னு ஒரு டயலாக்கு . சப்பா , இப்பவே கண்ண கட்ட ஆரம்பிக்குதே.............


நல்லா பாத்துக்கோங்க இதுல இருக்குற கேப்டன் பையன் அடுத்ததா சினிமால வேற நடிக்க போறாராம் . தமிழ்நாட்டு மக்களே உசார் . அடுத்த பஞ்ச் பரமசிவம் உருவாகிறார் ............

**********************************************************************************

அதிமுக இந்த வாட்டி இடைத்தேர்தல்ல ஜெயிச்சே ஆகனும்னு ஒத்த கால்ல நிக்குறது தெரியுது  . அதுக்காக இருக்குற மந்திரி எல்லாம் அங்க இப்ப பிரசாரம் பண்ண ஆரம்பிச்சாச்சு . நம்ம கேப்டன் வேற இதுக்கு தடை கேட்டார்.

அம்மா வேற கரண்டு கட்டு , சமச்சீர் கல்வி , அண்ணா நூலகம்னு ஏகப்பட்ட மைனஸ் வச்சுக்கிட்டு இருக்காங்க . ஜெயிப்பாங்களான்னு தெரியாது , ஆனா அங்க பலத்த போட்டி இருக்குன்னு மட்டும் தெரியுது

**********************************************************************************

அது எப்படிங்க திமுகவ விட்டுட்டு எழுத முடியும் ??

திமுக வும் இடைத்தேர்தல்ல நிக்குது . ஆனா இன்னும் அங்க யாரு வேட்பாளர்ன்னு சந்தேகமா தாங்க இருக்கு . இதுல கலைஞர் வேற நாங்க தமிழ பாலிடாயில் ஊத்தி வளர்த்தோம்னு கொக்கரிச்சுக்கிட்டு இருக்காரு . இன்னும் மியூசிக்கல் சேர் நிக்கலங்க யார் வேட்பாளர்ன்னு .


**********************************************************************************

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் நம்ம பாஜக பெரிய காமெடிபீசாவாலாம்னு ட்ரை பண்ணுறாங்க . ஆமாம் அவங்க இந்த இடைத்தேர்தல்ல யார் ஆதரவும் இல்லாம தனியா நிக்குறாங்க . இவங்க டவுசர உறுவலாம்னு எல்லாரும் பாத்தா இவங்க ரொம்ப உசார் , டவுசரே போடல , ரொம்ப புத்திசாலிங்க போல....

**********************************************************************************

டிஸ்கி : மேல சொன்னா மாதிரி வாரம் ஒரு பதிவ விட்டுறுவங்க . ஞாயிறு இல்லன்னா திங்கள் ரெண்டு நாள்ல விட்டுருவன் . உங்கள் ஆதரவு தேவை .

February 25, 2012

வாங்க சொதப்பலாம்.... - விமர்சனம்

எல்லாரும் விமர்சனம் போட்டாச்சு , நாம மட்டும் எதுக்கு விட்டு வைக்கனும்??
போட்டுட்டா போச்சு . நேத்து தான் படத்த பாத்தன் . அதனால லேட் விமர்சனத்துக்கு சாரிங்கோ ...........

முதல்ல படத்தோட கதைய சொல்லிடுறன் :

நெறைய பேரு படத்த பாத்து தொலச்சுருப்பீங்க . அவிங்க மட்டும் இந்த பேராவ ஸ்கிப் செஞ்சுடுங்க . அதாகப்பட்டது படத்தோட கதை என்னான்னா ஒரு பொண்ணும் பையனும் லவ் பண்றாங்க(ஆமாம் இது பெரிய ஒலக அதிசயம்) . அவங்க ரெண்டு பேரும் வாய வச்சுக்கிட்டு சும்மா இல்லாம எதுக்காகவாச்சும் சண்ட போட்டுக்கிட்டே இருக்குறாங்க . ஒரு கட்டத்துல(அதென்னா கட்டம் ?? சதுரம் ரவுண்டாலாம் இருக்காதா)  இதுக்கு நடுவுல ஈரோயினோட அப்பா அம்மா வேற அடிச்சுக்குறாங்க(ஏன்யா கன்னுக்குட்டிய பத்தி பேசுறப்ப பசு மாட்ட இழுக்குற) . ஈரோவும் ஈரோயினும் சேந்தாங்களா(அவங்க சேருவாங்கன்னு பச்ச புள்ளைக்குக் கூட தெரியும்) , ஈரோயினோட அப்பா அம்மா என்ன ஆனாங்கங்கறது தான் மீதிக்கதை.


இனிமே படத்த பத்தி என் அறிவுக்கு(?!?!?) எட்டுனத சொல்லுறன் :
 
படம் நிஜமாவே சூப்பரா தான் இருக்கு . என்ன ஹீரோ எப்ப பாத்தாலும் படத்த பத்தி கமெண்ட் குடுத்துக்கிட்டே இருக்காரு . நான் பிளாக்ல ப்ராக்கெட்ல கமெண்ட் சொல்லுவன்ல அந்த மாதிரி (பாரு ,இன்னும் ஒழுங்கா எழுதவே கத்துக்கல , அதுக்குள்ள படத்தோட கம்பேர் பண்ணுற ?? நீ நடத்து மவனே) . படத்தோட பெரிய ப்ளஸ்சே சித்தார்த்தோட பிரெண்ட்ஸ் , அப்புறம் ஈரோயினோட அப்பா அம்மா தாங்க . எப்பா பாரு சித்தார்த்தும் அமலாபாலும் சண்ட போடுறதுல அமலா பால் தாங்க ஜெயிக்குது . அதுக்கு அந்த புள்ள யூஸ் பண்ணுற வெப்பன் கண்ணீர் . அத சித்தார்த் சொல்லுற இடத்துல சிம்பாலிக்கா அருவிய காட்டிருப்பாங்க . 

படத்துல வெட்டுக்குத்து இல்லன்னாலும் அத விட மோசமான் மேட்டர்லாம் இருக்குங்க . படத்துல சித்தார்த்தோட பிரெண்டா வர்றவரு எப்ப பாரு பொண்ணுங்க கிட்ட அடி வாங்கிகிட்டே இருப்பாரு . இன்னொருத்தரு அண்ணான்னு சொல்லுற பொண்ணையும் லவ்விட்டே இருப்பாரு . இது பத்தாதுன்னு சித்தார்த் அப்பா அம்மா வேற ரொமான்ஸ் .... (முடியல) . ஒரு தடவ ரெண்டு தடவ சண்ட போட்டா பரவால்ல , இவங்க போடுற சண்டைக்கு ஒரு முற்றுப்புள்ளியே இல்லப்பா . 

பாவம் எப்ப பாத்தாலும் சித்தார்த் ஏதாச்சும் செய்ய போய் அது அவருக்கே வினையா முடிஞ்சுடுது . உதாரணத்துக்கு அமலா பால் எத பத்தி யோசிக்கிறன்னு கேப்பாங்க . அதுக்கு இவரு முதல்ல எத பத்தியும் யோசிக்கலன்னு சொல்லிட்டு , அப்புறம் மழுப்பறதுக்காக உன் போன்ல ஏன் இத்தன பசங்க நம்பர் இருக்குன்னு கேப்பாரு . அப்புறம் ஆரம்பிக்கும் பாருங்க ரணகளம் , (சித்தார்த்த நினைச்சு தியேட்டர்லயே அழுக அழுகயா வந்துடுச்சு)

படத்தோட ஸ்வீட் எபிசோடுன்னா அது அமலா பால் அப்பா அம்மா எபிசோடு தான் , அதுவும் கோயில்ல ரெண்டு பேரும் பாத்துக்குறப்ப வளையோசை பாட்டு போடுறது செம்ம குறும்பு . அதுக்கு அப்புறம் அவரு ஈரோயின விட ஓவரா வெக்க படுறாருங்க . பொண்ணுக்கிட்டயே லவ் லெட்டர குடுத்து அம்மாகிட்ட குடுக்க சொல்லுறது ஓவர் ரவுசு .

சித்தார்த்தோட மொத்த குடும்பமுமே பேஸ்புக்குல கும்மியடிச்சுட்டு இருக்குது . சித்தார்த்தோட ப்ரொஃபைல்ல அமலா பால் போட்டோவ பாத்துட்டு அது யாருன்னு கேட்டு குடும்பமே ஓட்டுறது , அமலா பால் சித்தார்த்துக்கிட்ட உன் சின்ன வயசு போட்டோ அப்லோடு பண்ணதுக்கு பாட்டின்னு அவரு பதில் சொல்லுறதுன்னு எல்லாமே ஏதோ கனவுல நடக்குற மாதிரியே இருக்கு (நம்ம வீட்டுல எல்லாம் அப்படி பாத்தாங்கன்னா ஒரு பில்லி,சூனியமாச்சும் வச்சுருப்பாங்க)

படத்தோட இன்னொரு பிளஸ்சு சித்தார்த்தோட பிரெண்டா வர்ற அந்த குண்டு பையன் தாங்க . அவன் லவ்வர்ச சேத்து வைக்கிறன்னு சொல்லிட்டு செய்யுற அலப்பற தாங்கல . அமலா பாலும் , சித்தார்த்தும் சண்டைன்னு சமாதானத்துக்கு அவருகிட்ட போவாங்க . பட் கொடுமை என்னான்னா அவருகிட்ட போனதுக்கு அப்புறம் தான் சண்டை பெருசா ஆவும் . அதுல வர்ற டயலாக் “நம்ம பசங்க சொதப்பறதுக்கு காரணமே இந்த மாதிரி மொக்க பசங்களோட அட்வைஸாட்டி தான்”.

படத்தோட மைனஸ்னா அந்த பாண்டிச்சேரி எபிசோட வளவளான்னு இழுத்துறுக்குறது தான். மத்தபடி படம் யூத்துங்க(என்னைய மாதிரி) எல்லாருக்கும் புடிக்கும் .

டிஸ்கி 1 : மவனே , எவனாச்சும் டயலாக்க வச்சு ஒரு பதிவு போடு , அது இதுன்னு சொன்னீங்க தொலச்சுபுடுவேன் . அதுக்குன்னு என் தலைவர் இருக்காரு . அவரு ஏற்கனவே போட்டுட்டாரு
டிஸ்கி 2 : எவனும் என்கிட்ட எங்க பாத்தன்லாம் கேட்டுறாதீங்கப்பா

February 24, 2012

தொடரும் மனிதஉரிமை மீறல்கள்

இப்பொழுது நடந்திருக்கும் வேளச்சேரி என்கவுண்டர் பற்றி தான் இணையத்தில் எல்லோரும் பரவலாக பேசி வருகிறார்கள் . ஆனால் இதிலும் இரு சாரார் பிரிந்து சண்டையிட்டு கொள்வது தான் வருந்ததக்க விஷயம் . 

ஒரு சாரார் அவர்களை கொன்றது சரி என்றும் , இன்னொரு சாரார் அவர்களை கொன்றது தவறு என்றும் வாதிடுகிறார்கள் . என் பார்வையில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது மிகப்பெரிய தவறே . 5 பேரை சுட்டுக்கொன்றது சட்டத்தை காக்கும் செயல் என்றால் பலநூறு பேரை கொன்ற கசாப்பை இன்னும் சிறையில் வைத்து அழகு பார்ப்பதன் உள்நோக்கம் எதுவோ ?

சென்ற ஜனவரி 23ந் தேதி 20 லட்சம் பணத்தை கொள்ளையடித்த கொள்ளையர்கள் தான் இவர்கள் . 20 லட்சம் பணத்திற்காக 5 பேரை கொல்ல தயங்காத அரசு , பல்லாயிரம் கோடியை கொள்ளையடிக்கும் பணமுதலைகளை இன்னும் விட்டு வைத்திருப்பது இந்த நூற்றாண்டின் உச்சகட்ட கேவலம் . 

தமிழ்நாட்டில் இதுவரை இப்படி ஒரு என்கவுண்டர் நடக்கவில்லை என்று வேறு போலீசார் தங்கள் மார் தூக்கி சொல்கிறார்கள் . இந்த சம்பவத்திற்கு இன்னும் ஒரு மனித உரிமை அமைப்பு கூட கண்டனம் தெரிவிக்கவில்லை  . அவர்களும் இதை ஏற்றுக்கொண்டார்களோ என்று அஞ்சத்தோன்றுகிறது . இதை விட அச்சபடவேண்டிய தகவல் ஒன்று இருக்கிறது . அது மக்கள் இந்த என்கவுண்டரை வரவேற்று இருப்பது தான் . மக்கள் இப்படியே வரவேற்பார்களானால் ஒரு நாள் அவர்களே வருத்தபட வேண்டியது இருக்கும் .

ஒரு கட்டத்தில் எந்த தண்டனைக்கும் என்கவுண்டரை செயல்படுத்தலாம் என்ற நிலைமை ஏற்படலாம் . இதில் இன்னொரு வினோதம் போலீசாரின் செயல்பாடே . மாலையிலேயே கொள்ளையர்களை பற்றி துப்பு கிடைத்தும் அதை பொருட்படுத்தாமல் நள்ளிரவு 1.30க்கு இந்த என்கவுண்டரை நிறைவேற்றியிருப்பது , கொள்ளையர்களை உயிரோடு விட்டால் பல தகவல்கள் வெளிவரக்கூடும் என நினைத்து செயல்பட்டதையே சுட்டிக்காட்டுகிறது .

கொள்ளையடித்த பணத்தை மீட்டு விட்டோம் என கூறுகிறார்கள் . ஆனால் 5 உயிர்களின் விலை 20 லட்சமா ?? பிற்காலத்தில் தங்களுக்கு வேண்டாதவர்களை சுட்டுக்கொல்ல மக்கள் கூலிப்படைகளை நாடாமல் போலீசாரை நாடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை .

சட்டம் , ஒழுங்கு நிலைநாட்ட பட்டுவிட்டது என பலர் பேட்டி கொடுக்கிறார்கள் . ஆனால் இது மக்களின் மனதில் ஒரு மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என சொல்ல மறந்து விட்டார்கள் . இனிவரும் காலத்திலாவது மக்கள் இதை போன்ற மனிதாபிமானமற்ற செயல்களை ஆதரிப்பதை விட்டொழிக்கட்டும் .

February 23, 2012

தமிழன் என்றொரு இனமுண்டு......

தமிழன் என்றாலே எவரும் மதிக்காத ஒரு நிலை உருவாகிக்கொண்டிருக்கிறது இந்த சீர் மிகுந்த உலகில்..........

 கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களை சுட்டுகொன்றது இத்தாலி ராணுவம் . இதில் தமிழக மீனவர்கள் , கேரள மீனவர்களும் அடக்கம் . இதனால் நாடே கொந்தளித்தது . கேரளாவாசிகள் கொதித்து எழுந்தனர் , இந்தியாவை சேர்ந்த கேரள மீனவர்களை எப்படி சுட்டு கொல்லலாம் என்று . ஆமாம் கேரளா மட்டுமே இந்தியாவிற்குள் இருக்கிறது . தமிழகம் என்பதை இந்தியாவை விட்டு விலக்கி வைத்து பல வருடங்களாகின்றன் . கேரளா கொதித்ததை தொடர்ந்து நமது அண்டை நாடான இந்தியாவை சேர்ந்த அரசு கைது செய்தது . அப்பொழுது தமிழக மீனவர்களின் குடும்பங்களில் நிலை ?? தமிழகம் இப்பொழுது இந்தியாவின் கீழ் இருக்கும் ஒரு தீவே . யார் வேண்டுமானாலும் அடிக்கலாம் , மிதிக்கலாம் , கேட்க யாரும் கிடையாது . ஆனால் இன்னும் தமிழ்நாடு இந்தியாவிற்குள் தான் இருக்கிறது என பலர் சொல்வது விந்தையாய் இருக்கிறது . தன் தேசத்திற்குள் இருக்கும் ஒரு அப்பாவி மீனவனை கொன்றால் அந்த நாடு பார்த்து கொண்டு சும்மா இருக்குமா ?? ஆனால் இந்த பாரத திருநாடு இருக்கும் . இது ஒரு முன்மாதிரி தேசம் என்பதை மற்ற நாடுகள் உணர்ந்து கொள்ள வேண்டும் .

இது ஒரு சின்ன விஷயம் என்று சொல்லும் அறிஞர்களே , பல வருடங்களாக தொடரும் இலங்கை பிரச்சனை உங்கள் கண்களுக்கு தெரியாதா ?? மீனவர்கள் தினம் தங்கள் பிழைப்பை சாவிலேயே நடத்தி கொண்டு இருப்பது எவர் கண்ணுக்கும் தெரியாமல் போனது ஒரு விசித்திரம் . ஒரு பெண்ணின் சுயநலத்தால் ஒரு மாநிலமே இன்று கண்ணீரில் தத்தளித்து கொண்டிருக்கிறது . ஆனால் அந்த பெண்ணோ இன்னும் தமிழகம் என்று ஒன்று இருப்பதை மறந்து விட்டாரா ? அவருக்கு தமிழகத்தை சேர்ந்த எம்.பிக்கள் தேவை . ஆனால் அந்த எம்.பி.க்களை உருவாக்கிய மக்கள் தேவை இல்லை . மேலும் இத்தாலி விஷயத்தில் நடந்த கொடுமை தமிழகத்தை சேர்ந்த மத்திய கப்பல்துறை அமைச்சரே தமிழகத்தை பற்றி வாய் திறவாதது தான் . சோனியா தமிழகத்தை சேர்ந்த மக்களை மட்டும் மறந்தாரா அல்லது தமிழகத்தை சேர்ந்த எம்.பி.க்களை வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று நினைத்தாரோ தெரியாது . தமிழக ஆட்சியில் இருப்பவர்களும் மீனவர் என்று ஒரு இனம் இருப்பதை மறந்து விட்டதையே இந்த நிலை சுட்டி காட்டுகிறது .

தமிழக மீனவன் செய்த பாவம் முதலில் மீனவனாய் பிறந்தது , அதனினும் கொடிது தமிழினத்தில் பிறந்தது . வேறு எந்த நாட்டை சேர்ந்த மீனவனையும் இப்படி மாற்றாந்தாய் போக்குடன் நடத்தி பார்த்ததுண்டா ??? ஒரு மனிதனை கொன்றதற்கு ஒரு இனம் ஏற்கனவே அழித்து விட்டார்கள் . இப்போது மிஞ்சியிருப்பது தமிழன் என்று மார்தட்டி கொள்ளும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தான் . அவர்களையும் முற்றிலும் அழித்து விட்டால் இந்தியாவின் பெயர் உலக சரித்திரத்தில் எழுதப்படும் , பொன்னால் அல்ல , ரத்தத்தால் . அந்த பெருமையை சீக்கிரமே நிறைவேற்றும் நோக்குடன் இருக்கிறது மத்திய அரசு . தூங்கும் போது கால் ஆட்டவில்லையென்றால் பிணம் என்று நினைக்கும் இவ்வுலகிலே நடந்தால் கூட பிணம் என்று நினைப்பது இந்தியாவில் மட்டுமே நிகழும் கொடூரம் . இந்நிலை தொடருமேயானால் இவ்வுலகம் தமிழக மீனவனை அருங்காட்சியகத்தில் மட்டுமே பார்க்க நேரிடும் .

தமிழன் என்றொரு இனம் உண்டு . மானம் , வெட்கம் அதற்கு இல்லை என்று இப்பொழுதே எழுத ஆரம்பித்து விட்டார்கள் . கூடிய விரைவில் அது உலகத்திலேயே இல்லை என்று கூட எழுதுவார்கள் . அப்பொழுதும் நாம் பல்லிளித்து கொண்டே இருப்போம் .

நேற்று சிங்களவன் அடித்தான் , இன்று இத்தாலிகாரன் அடிக்கிறான் , நாளை ??? யாரும் அடிக்க மாட்டார்கள் , நாம் இதை போல் இருப்போமேயானால் நாளை நம்மை இருக்க விட மாட்டார்கள் . இருந்தால் தானே அடிப்பதற்கு ??

இன்னமும் இந்த மானம்கெட்ட நிலை தேவையா தமிழா ?? உன் மானத்தையும் , வீரத்தையும் காட்டிடும் நேரம் வெகு தூரத்தில் இல்லை . அதற்கு பிறகும் பயணமும் இல்லை .

February 21, 2012

அப்பாடக்கர்ஸ் - பாகம் 1

இன்னைக்கு தமிழகத்த கலக்கிக்கிட்டு இருக்கற சில பேர பத்தி தான் இந்த பதிவு .............

1)கேப்டன் விஜயகாந்த் : 

கேப்டன் போல வருமாஆஆஆஆஆ


இவரு தாங்க தமிழ்நாட்டோட தமிழ்நாட்டுல இப்போதைக்கு மிகபிரபலமானவரு . இவர பத்தி தமிழ்நாட்டுல தெரியாதவங்க யாரும் இருக்க முடியாது . இவரோட ஸ்பெசாலிட்டியே ஏர்ல பறந்து பறந்து அடிக்கிறது தானுங்க . இவரு கணக்குல புலிங்க , இவரு கணக்கு சொன்னா மிஸ்ஸே ஆகாது . அதே மாதிரி தான் இவரோட பஞ்ச் டயலாக்கும் தமிழ்நாட்டுல மட்டும் இல்லாம் பட்டிதொட்டி பூரா பேமசுங்க ........
இவரு பண்ணுற அடாவடி இருக்குங்களே .... சொல்லி மாளாது . விருதகிரின்னு ஒரு படமுங்க . அந்த படத்துல தலைவர் பண்ணுன காரியத்த பாத்தீங்கன்னா நீங்க அரண்டு போயிடுவீங்க . அப்படி என்ன தான் செஞ்சுபுட்டாருன்னு கேக்குறீங்களா ??? ஸ்விட்ஸர்லாந்து போலீசுக்கே எப்படி அக்யூஸ்ட புடிக்கனும்னு ட்யூசன் எடுக்குறாருங்க . சரி அத கூட விட்டுறலாம் . தர்மபுரின்னு ஒரு படம் , அந்த படத்துல இவர வில்லனோட ஆளுங்க துப்பாக்கியாட்டி சுடுவாங்க . ஆனா இவருக்கு ஒன்னும் ஆகாது , ஏன்னா இவரு ஒரு தாம்பாளத்த நெஞ்சுல வச்சுருப்பாருங்க (அந்த தாம்பாளத்துல பட்டு புல்லட்டே எகிறிடுச்சாம்) . ரமணாங்கிற படத்துல இவரு விண்டோஸ் மீடியா பிளேயர்ல தாங்க டாக்குமெண்ட் அடிப்பாரு . இவரு தாங்க தமிழ்நாட்டோட நிரந்தர கேப்டன் . அது ஏன்னா இவரு எல்லா படத்துலயும் போலீசா தான் நடிப்பாரு . இவரு ஈரோயினு கூட டூயட் பாட ஆரம்பிச்சாருன்னா போதும் , தியேட்டர்ல பத்து பதினஞ்சு தல உருளாம போவாது . இவரு புடிக்காத தீவரவாதிங்களே இல்லங்க . அதே மாதிரி எந்த நாட்டு அன்னியசக்தியும் தமிழ்நாட்டுக்குள்ள நுழையாம பாதுகாக்கறது இவரு தானுங்க .அட இதெல்லாம் இவரோட பழைய மேட்டர் , புது மேட்டர்ல தான் இருக்குது கிக்கே ...........

இவரு எத்தன நாள் தான் கேப்டனா நடிக்கிறது, மெய்யாளுமே கேப்டன் ஆயிடுவோம்னு அரசியல்ல குதிச்சுட்டாரு .அதுக்கு அப்புறம் நடந்தது தான் ரியல் ரணகளமே .........
இவரு அரசியல்ல குதிச்சோன இவர இவரே கருப்பு எம்.ஜி.ஆர்னு சொல்லிக்கிட்டாரு . இவரு அரசியலுக்கு வந்தோன சந்திச்ச மொத தேர்தல் 2006 சட்டமன்ற தேர்தல் . இவரு கூட நின்னவங்க எல்லாரும் அவுட்டு , ஆனா கேப்டன் எம்.எல்.ஏ ஆகி சட்டசபைக்குள்ள போனாரு  , ஆனா ஒன்னும் செய்யலங்க . இப்படியே அடி வாங்கிகிட்டு இருந்தாருங்க . கொஞ்ச நாளைக்கு இவர கைப்புள்ள கணக்கா எல்லாரும் பாத்தாங்கன்னு சொன்னா அது குறைச்சல் தானுங்க ....

அதுக்கு அப்புறமாச்சும் இவரு நடிக்கறத நிப்பாட்டுவாருன்னு பாத்தாங்க ..... ம்ஹூம் அதுக்கு அப்புறம் நான் முதல்லயே சொன்ன ஒலக மகா காவியம் விருதகிரி வந்துச்சுங்க.......

அதுக்கு அப்புறம் ஒரு அஞ்சு வருசம் எப்படியோ ஓடிபோச்சு . அதுக்கு அப்புறம் 2011 - சட்டமன்ற தேர்தல்ல அம்மா கூப்புட்டாக , அய்யா கூப்புட்டாக , அன்னை கூப்புட்டாக !!! தலைவர் கடவுளோடயும் மக்களோடயும் தான் கூட்டனின்னு ஸ்ட்ராங்கா மறுத்துட்டாரு . அதுக்கு அப்புறம் அவருக்கு பில்லி , சூனியம்லாம் வச்சு அம்மா அவிங்க கட்சிக்கு இழுத்துட்டாங்க . ஆமாங்க இவங்க ரெண்டு பேரும் கூட்டணின்னு ஒன்னு வச்சுக்கிட்டாங்க . ஆனா ரெண்டு பேரும் இது வரைக்கும் நாங்க கூட்டணில இருக்கோம்னு சொல்லிக்கிட்டதுல்ல . இவரு இந்த தேர்தல்ல பண்ண அடாவடிக்கு அலும்பே இல்லைங்க ....... தன்னோட கட்சி வேட்பாளருக்கு ஆதரவா பிரச்சாரம் பண்ண போயி அங்க அவரு பேர மாத்தி சொல்லிபோட்டாருங்க . ஒடனே அந்த வேட்பாளர் நம்ம மம்மி , டாடி வச்ச பேர இவரு மாத்துறாரேன்னு தெரியாத்தனமா சொல்லிட்டாருங்க . ஒடனே வந்துச்சு பாருங்க கேப்டனுக்கு கோவம் , என்னியவே எதுத்து பேசுறியான்னு சொல்லிட்டு வேட்பாளரோட டாடிமம்மியே அவரு பேர மறந்து போற அளவுக்கு வச்சு நொங்கு நொங்குன்னு நொங்கிட்டாருங்க . அன்னைலேந்து அவரு போற இடம்லாம் அவரு மத்தவங்கள அடிப்பாருன்னே கூட்டம் பெருகிடுச்சு . இது பத்தாதுன்னு வேற இவரு குடிச்சுட்டு தான் பிரச்சாரம் பண்ணுறாருன்னு ஒரு செய்திய கெளப்பி விட்டுட்டாங்க . இவருக்கு போட்டியா வடிவேல எறக்கி விட்டாங்க பிரசார களத்துல . இருந்தாலும் கேப்டன பீட் பண்ண யாராட்டி முடியும் ?? இந்த மாதிரி மேட்டராட்டியே கேப்டன் புகழ் தாறுமாறா ஓட ஆரம்பிச்சுது . மக்கள் எல்லாரும் சேந்து பயங்கரமா யோசிச்சு இவர ஜெயிக்க வைச்சாங்க . பாத்தா பொசுக்குன்னு இவரு எதிர்கட்சி தலைவராயிட்டாரு . அதுக்கு அப்புறம் பத்திரிக்கைலாம் இவருக்கிட்ட ஆளும்கட்சி எப்படி ஆட்சி நடத்துதுன்னு கேட்டாங்க . இவரு பதிலே சொல்லலியே , அதுக்கு இப்படி ஒரு அப்பாடக்கர் ரீசன் சொன்னாரு , ஆறு மாசம் டைம் குடுங்க அப்புறமா சொல்லுறன்னு .

சரி இதோட கதை முடிஞ்சுடும்னு பாத்தா அங்க தான்யா வச்சாங்க ஒரு பெரிய ட்விஸ்ட .................

கொஞ்ச நாள் தென்றலா இருந்த கேப்டன் ஒரு நாள் புயலாயிட்டாரு . அட ஆமாம் இவரு பத்திரிக்கைகாரங்க கிட்ட கேட்ட 6 மாசம் அவகாசம் முடிஞ்சிடுச்சு . அய்யயோ திருப்பி கொஸ்டீன் கேப்பாங்களேன்னு சொல்லிட்டு இவரு பயங்கரமா யோசிச்சு ஒரு பிளான் போட்டாரு . அந்த பிளான் படி தான் பின்னாடி நான் எழுதிருக்குறது நடந்துச்சுன்னு உளவுத்துறை சொன்னுச்சு . அந்த அம்மா இவர பேச விடலைன்னு சொல்லிட்டு இவரு சட்டசபைல எந்திரிச்சு அந்த அம்மாவ பாத்து நாக்க துறுத்தி ஒரு பஞ்ச் வச்சாரு பாருங்க , சட்டசபை மட்டுமில்ல , இந்த உலகமே ஆடி போயிடுச்சு . அதுல டென்சனான அம்மா இவர பாத்து ஒரு கேள்விய கேட்டு போட்டாங்க , முடிஞ்சா உனக்கு திராணி(தைரியம்) இருந்தா தனியா இடைதேர்தல்ல நில்லுன்னு . சும்மாவே கேப்டன் ஆடுவாரு காலுல சலங்கைய வேற கட்டி விட்டுட்டாங்க கேக்கவா வேணும் ?? அவரு அந்த சவாலுக்கு ஒத்துகிட்டாரு . அந்த சவால்ல அவரு ஜெயிச்சாரா இல்லியான்னு பொறுத்திருந்து பார்ப்போம்



டிஸ்கி 1 : இந்த பதிவுலயே எல்லா அப்பாடக்கர பத்தியும் போட்டுறலாம்னு தான் இருந்தன் , பட் ரொம்ப லென்தா போனுச்சுன்னு சொல்லிட்டு ஒவ்வொருத்தரையா போடுவோமேன்னு இருக்கன் .........

டிஸ்கி 2 : என் பதிவ இண்ட்லி , உடான்ஸ் - ரெண்டுத்தலயும் இணைச்சுருக்கன் . சோ மறக்காம ஓட்டு போடுங்க மக்காஸ் . அப்புறம் இந்த பதிவ உங்களுக்கு தெரிஞ்ச ஏரியாலலாம் போஸ்டர் ஒட்டி விட்டுறுங்க (புடிச்சுருந்தா மட்டும்)

February 20, 2012

காதலில் சொதப்புவது எப்படி......

பஸ்கி : ஏய்ய்ய்ய்ய் !!! யாருடா அது விமர்சனம்னு நெனச்சுக்கிட்டு உள்ளார வர்றது ???
அப்படி நெனச்சுகிட்டு வர்றவங்க எல்லாம் அப்படியே டூ ஸ்டெப்ஸ் பேக் போயிக்கோ , மீதி எல்லாரும் மட்டும் உள்ளார வா !!!

நம்ம இப்ப காதல்ல எப்படி எப்படி எல்லாம் சொதப்புறதுன்னு பாப்போம் அதுக்கு முன்னாடி இந்த பதிவு எழுத காரணம் ........
நம்ம பசங்க பல பேரு லவ்வு பண்ண பிகர் கிடைக்காம அல்லாடுறாங்க , அப்படியும் சில பேரு ஒரு பிகர புடிச்சுக்கிட்டு அவஸ்தபடுறாங்க . அவங்க எப்படி அந்த பிகர கழட்டி விடுறதுன்னு தான் இந்த பதிவு (ரொம்ப நல்ல எண்ணம்டா)

முதல்ல நம்ம பிரண்டுங்க :

இந்த காதலுக்கு உதவுறதே நம்ம பிரண்டுங்க தாங்க . நம்ம காதல நம்ம லவ்வர்கிட்ட நாம சொல்லுறோமோ இல்லையோ , நம்ம பிரண்டுங்க கண்டிப்பா அவிங்ககிட்ட சொல்லிடுவாங்க . அப்படி பட்டவங்கள விட்டுறுங்க , இந்த பொண்ணே கிடைக்காத பிரண்டுங்ககிட்ட போய் எனக்கு அந்த பொண்ண புடிக்கலன்னு சொல்லி பாருங்க . அப்புறம் உங்க மேட்டர் நம்ம வீரபாகு பேக்கரி மாதிரி ஒபாமா வரைக்கும் தெரிஞ்சா கூட ஆச்சரியம் இல்லைங்க (இந்த விசயத்துல மட்டும் பசங்க வில்லாதி வில்லனுங்க)

அடுத்தது நம்மள பெத்தவங்க

உங்க பெத்தவங்ககிட்ட போய் அம்மா , அப்பா நான் ஒரு பொண்ண லவ்வு பண்ணுறன்னு மட்டும் சொல்லுங்க . ஒடனே உங்க பெத்தவங்க காசு வெட்டி போட்டாச்சும் உங்க லவ்வ அத்து விட்டுறுவாங்க (இதுல ஒரு ஆபத்தும் இருக்குங்க . உங்க பேரண்ட்ஸ் பசங்க படத்துல வர்ற மாதிரி நல்லவங்களா இருந்துட்டாங்கன்னா உங்க பாடு ஞேஞேஞேஞே தான்)

அடுத்தது பொண்ணோட அண்ணன்

உடம்ப அர்னால்டு மாதிரி ஏத்தி வச்சுருக்கவங்க , எம்புட்டு அடிச்சாலும் தாங்குவோம்னு சொல்லுற தாராள மனசு படைச்சவங்க , இந்த ஐடியாவ செயல்படுத்தவும் . நேரா பொண்ணோட அண்ணன்கிட்ட போய் , குறிப்பா அவரு பிரெண்ட்ஸ் கூட இருக்கறப்ப போய் நான் உன் தங்கச்சிய லவ் பண்ணுறண்டான்னு சொல்லிபாருங்க , உங்க லவ்வு கிழிஞ்சிரும் . மே பி உங்க கன்னமும் கிழியலாம் , ஏன் நீங்களே கூட கிழியலாம் .. ஆனா லவ்வு கண்பார்மா அத்துக்கும் (இதுலயும் ஒரு பிரச்சன இருக்குது , உங்க ஆளுக்கு அண்ணன் இல்லன்னா உங்க பாடு திண்டாட்டம் தான்)

அடுத்தது அந்த பொண்ணோட பிரண்டு

நம்ம பசங்க எல்லாம் கண்டிப்பா அவங்க ஆளோட பேசுறாங்களோ இல்லையோ , அந்த பொண்ணோட பிரண்ட காக்கா புடிச்சு வச்சுருப்பாங்க ரெண்டு பேத்துக்கும் நடுவுல மெசெஞ்சரா . அந்த புள்ளகிட்ட போய் உன் பிரண்ட லவ் பண்ணுறன்னு எல்லாம் சொல்ல வேணாம் , நீ அழகா இருக்கன்னு சொன்னாலே போதும் . அந்த பொண்ணு வெக்கபட்டுகிட்டே போய் அது பிரண்டு , அதாங்க உங்க லவ்வருக்கிட்ட சொல்லும் . அப்ப இருக்குது பாருங்க தீபாவளி , அந்த புள்ள உங்கள பிரியுதோ இல்லையோ , உங்கள நார் நாரா கிழிச்சுரும் . அப்புறம் அத காரணம் காட்டி நீங்க உங்க லவ்வ அத்துக்கலாம். (உங்க ஆளு கொஞ்சம் ஜாலி டைப்பா இருந்தா நான் பொறுப்பு இல்ல)

அடுத்தது அந்த பொண்ண பெத்தவங்க :

மேல உள்ளதும் சரிபட்டு வராதவங்க ஸ்ட்ரைட்டா போய் அந்த பொண்ண பெத்தவங்ககிட்டயே சொல்லிடுங்க . உங்க லவ்வு அத்துகிதோ இல்லையோ அந்த பொண்ணுக்கு அடுத்த மாசத்துல கல்யாணம் கண்டிப்பா ஆயிடும் . (உங்க பெத்தவங்க மாதிரி அவங்க அப்பா அம்மாவும் நல்லவங்களா இருந்தா ??? உனக்கு சங்கு தாண்டி)

தி லாஸ்ட் அண்டு பைனல்

இம்புட்டு செஞ்சும் ஆவலயா ?? ரைட்டு நேரா போய் அந்த பொண்ணுக்கிட்டயே போய் உன் தங்கச்சி சூப்பரா இருக்குறான்னு சொல்லுங்க . தங்கச்சி இல்லன்னா பரவால்ல , இந்த டயலாக்க மட்டும் சொல்லி பாருங்க , ஒடனே அந்த பொண்ணு உங்கள செப்பலாட்டி அடிச்சு இனிமே வாழ்க்கைல நீங்க லவ்வே பண்ண கூடாதுன்னு சாபம் வுட்டுட்டு போய்டும் . அந்த டயலாக்கு 
அந்த பொண்ணோட கால்ல விழுந்து  ”அம்மா தாயே என்னைய விட்டுடுமா”

(அப்படி சொல்லியும் அந்த பொண்ணு உங்கள தான் லவ்வு பண்ணுவன்னு ஒத்த கால்ல நின்னா கம்பெனி பொறுப்பில்ல)

(என்னாங்க மேல உள்ள டயலாக் தெரியலயா ??? அந்த லைன மட்டும் செலெக்ட் பண்ணுங்க தெரியும் . இந்த மானங்கெட்ட ஐடியாவ அப்படி தான் வைக்கோனும்)

டிஸ்கி : கடைசியா அந்த பொண்ணு உங்க லவ்வ புட்டுகிட்டு போனா மறக்காம அந்த பொண்ணோட நம்பர எனக்கு அனுப்பி வச்சுடுங்க ......

இப்படிக்கு ,
லவ்வு பண்ண பொண்ணு கிடைக்கதோர் சங்கம்

February 19, 2012

மின்சாரம் - மனைவி டூ காதலி

அடுத்த பதிவு என்னா எழுதுறதுன்னு யோசிச்சுகிட்டு இருந்தப்ப நேத்து சந்துலயும் கேட்டு வைப்போமேன்னு கேட்டன் !! அதுக்கு பெரும்பாலானவர்கள் சொன்ன பதில் “மின்சாரம்”.சரி நாம பதிவுக்கு போகலாம் !!!

இன்னைக்கு தமிழ்நாட்ட உலுக்கிகிட்டு இருக்குற பெரிய பிரச்சனை மின்சாரம் தான் (அப்ப இது சீரியஸ் பதிவா ?? அட அதெல்லாம் இல்லிங்க , ஓப்பனிங் மட்டும் ......)

தினமும் நம்ம தமிழ் மக்கள் காலைல எந்திரிக்கிறது 7 மணிக்கு மேல தானுங்க . ஆனா இந்த கரண்ட் கட்டாட்டி தினமும் 6 மணிக்கே எந்திரிச்சு புடுறாங்க . முக்கியமா பொண்ணுங்க தாங்க ஓவரா இதாட்டி அவஸ்தைபடுறது . பின்ன காலங்காத்தாலையே எந்திரிச்சா வாசல் பெருக்கனும் , கோலம் வேற போடனும்ல அதான் (பொண்ணுங்க எங்கய்யா இப்ப அதெல்லாம் செய்யுறாங்கன்னு நீங்க கேக்குறது புரியுது .....)

இந்த கரண்ட் கட்டாட்டி சில நன்மைகளும் இருக்குது:

1)கரண்ட் சரியா சீரியல் பாக்குற நேரமா பாத்து போகுது . சோ வீட்டுல சீரியல தொல்ல இருக்க மாட்டிங்குது

2)காலங்காத்தால சீக்கிரமா வேலைக்கு போறவங்க , இந்த கரண்ட் கட்டாட்டி தானாவே எந்திரிச்சுடுறாங்க
3)ட்விட்டர்ல மொக்கை போடுறவங்க எண்ணிக்கை ரொம்ப குறைஞ்சுருக்கு(ட்விட்டர்வாழ் மகாஜனங்களே !!! நான் என்னியும் சேத்து தான் சொல்லுறன் . சோ நோ டென்சன்)

4)10ம் கிளாஸ் , 12ம் கிளாஸ் படிக்குற புள்ளைங்களாம் இனிமே நான் தெரு விளக்குல தான் உக்காந்து படிச்சேன் , ஸ்டேட் பஸ்ட் வாங்குனன்னு நம்ம வயித்துல ஆசிட் ஊத்த முடியாது

5)தினம் தினம் பொண்டாட்டி மூஞ்ச பாத்து நொந்துபோனவங்க , நெம்ப நிம்மதியா இருக்குறாங்க.

6)வூட்டுல கரண்டு பில்லு ரொம்ப கம்மியா வருது (கரண்டும் ரொம்ப கம்மியா தான் வருதுப்பா)

7)இந்த இடத்துல ஈ.பி.காரங்க பங்சுவாலிட்டிய சொல்லியே தீரனும் . கரெக்டா 6 மணிக்கு போகும்னா 5.59க்கே நிறுத்திடுறாங்க . நம்ம அரசு ஊழியர்களோட கடமையுணர்ச்சி அதிகமாகுது

8)ஐ.டி.கம்பெனி காரங்க ரொம்ப சந்தோசமா இருக்குறாங்க . ஆமாம் கம்பெனிக்கு போனா ஜெனரேட்டர் போடுவாங்கன்னு இப்பலாம் யாரும் ஆபிஸ் போகாம இருக்குறது கிடையாது .

9)யூ.பி.எஸ் தயாரிக்கிரவங்க ரொம்ப ஹேப்பியா இருக்காங்க (வியாபாரம் பிச்சுகிட்டு போறதுலாம் இருக்கட்டும் , அத சார்ஜ் பண்ணுறதுக்கு கூட அவனுங்க கரண்ட விடுறது இல்ல)

10)டிவியில இப்பலாம் சொல்லுறது மெய் , யூவா ?? மீயா ?? போன்ற நிகழ்ச்சிங்களை பாக்காம மக்கள்லாம் மிகுந்த ஆரோக்கியத்தோட இருக்குறாங்க . 

11)இது ரொம்ப முக்கியம் . லவ்வர்ஸ்லாம் ரொம்ப சந்தோசமா இருக்குறாங்க . 
கரண்ட் இல்லன்னு சொல்லிட்டு இவிங்க பண்ணுற அடாவடி தாங்க முடியலப்பா

12)மொபைல் சார்ஜ் நிறைய நேரம் இருக்க மாட்டிங்குது. சோ காசு போட்டுட்டு பேசி தீர்க்க முடியாது

டிஸ்கி : 
இந்த பதிவுக்கு மின்சாரம் - மனைவி டூ காதலின்னு பேரு வைக்க காரணம் : முன்னாடி எல்லாம் சம்சாரம் அது மின்சாரம்னு தான் சொல்லுவாங்க , ஆனா இப்ப காதலி அது மின்சாரம்னு தான் சொல்லுறாங்க . அதுக்கு காரணம் , காதலி மாதிரி எப்ப கரண்ட் வரும் , போவும்னே சொல்ல முடியலப்பா

February 18, 2012

சாருவின் அட்டகாசங்கள்

இந்த பதிவ எழுதறதுக்கு காரணம் பிரபல எழுத்தாளர்னு சொல்லிக்கிற ஒருத்தர் தன்னோட இமேஜ எப்படி எப்படி எல்லாம் ஒசத்திகிட்டு இருக்கோம்னு நினைச்சுகிட்டு இருக்காருங்கறதுக்காக.......

அந்த எழுத்தாளர் வேற யாரும் இல்லைங்க ........ தமிழ்நாட்டுல இப்ப கொட்டுக்கிட்டு இருக்குற ஒரு வெக்கங்கெட்ட ஆளு , எம்புட்டு அடிச்சாலும் அடிச்சுகிட்ட மாதிரியே காட்டாதவரு , நம்ம தமிழ் பிளாக்கர்களின் தீரா எதிரி சாரு நிவேதிதா தான்.


இந்த ஆளு எப்பவுமே இப்படி தாங்க , வருசத்துக்கு ஒரு வாட்டி ஏதாச்சும் ஒரு நாவல்(அப்படிங்கற பேர்ல) ஒண்ணுத்த விட்டுருவாரு . அதுக்கு அப்புறம் அவர் நாவல பத்தி புகழ பரப்பறதுக்குன்னே ஒரு நாலு பேரு இருக்காங்க.அவிங்க பரப்புனா பத்தாதுன்னு இவரு தன்னோட பிளாக்ல வேற போட்டுக்குவாரு தன்னோட நாவல நல்லா விமர்சிச்சுருக்காங்கன்னு !! கடைசியில பாத்தா இவரு தான் அவங்கள அப்படி எழுத சொல்லிருப்பாரு (எதுக்குடா இந்த மானங்கெட்ட பொழப்பு ??)

அப்புறம் தமிழ் படிக்க தெரிஞ்ச சில நல்ல உள்ளங்கள் இத படிச்சுட்டு பொறுக்க மாட்டாம இந்த ஆள கழுவி ஊத்த ஆரம்பிச்சுருவாங்க !! ஒடனே அதுக்கு இவரு பதில் எழுத மாட்டாரு , இவரோட சொம்புதூக்கிங்கள்ல யாராச்சும் ஒருத்தர விட்டு விமர்சனம் செஞ்ச ஆள கிழிச்சு எடுத்துருவாரு !! அப்படியும் அந்த ஆளுங்க அடங்கலன்னா இவரே இவரு பிளாக்ல கண்ணாபின்னான்னு கிறுக்கி தொலைப்பாரு..

இவரு நாவல்ல நீங்க தமிழ் வார்த்தைங்கள எதிர்பாத்தா நீங்க ரொம்ப பாவம் . எதுக்கு எடுத்தாலும் உண்மையா பேசுறன்னு சொல்லிட்டு கெட்ட வார்த்தை தான் ஓவரா யூஸ் பண்ணுவாப்பல . அதுவும் இல்லாம புரியாத நாலு புக்க ரெஃபர் பண்ணிட்டு வந்து அதுலேந்து சிலபல கவுஜைங்கள சுட்டு இவரு புத்தகத்துல போட்டுகிட்டு அத உலகதரத்துல இருக்குதுன்னு இவரே கூவிக்குவாரு , பத்தாத குறைக்கு இத உலகம் புல்லா தம்பட்டம் அடிக்க சொல்லி தன்னோட சொம்புதூக்கிங்ககிட்ட சொல்லிருவாரு , அப்புறம் என்ன கேக்கவா வேணும் ?? இவரு நாவல் வந்த ஒரு மாசத்துக்கு இவரு அடிபொடிங்க இண்டர்னெட்ட நாரடிச்சுருவாங்க...

அதுவும் இல்லாம சார் அந்த விசயத்துல ரொம்ப மட்டம் . டிடர்ஜெண்ட்ன்னு ஒன்னு இருக்குதான்னு இவருக்கு தெரியுமா , தெரியாதான்னே தெரியாது . ஃபேஸ்புக்குல இவரு ஒரு அக்கவுண்ட் வச்சுருக்காரு . அந்த அக்கவுண்ட்ல வெறும் பொண்ணுங்க மட்டும் தான் அலவுட் . பொண்ணுங்க கூட மட்டும் தான் சேட் பண்ணுவாரு . அதுவும் ரொம்ப மட்டமா தான் பேசுவாரு . இவரு தொல்ல தாங்காம அந்த பொண்ணு இவர பிளாக்(இது வேற பிளாக் - block) பண்ணிடுச்சுன்னா ஒடனே ஆரம்பிப்பாரு பாருங்க , எல்லாரும் பொண்ணுங்கள மட்டும் தான் மதிக்கிறாங்க ... எல்லாருமே பொம்பள பொறுக்கிங்கன்னு ஆரம்பிச்சுருவாரு . அப்படி எத வச்சு இவரு நம்மாளுங்கள பொம்பள பொறுக்கிங்கன்னு சொல்லுறாரு தெரியுமா ??? அந்த பொண்ணு போட்ட ஸ்டேடஸ் அப்டேட்டுக்கு 30 லைக்கு வந்துச்சாம் . இவரு போட்ட ஸ்டேட்டச யாரும் கண்டுக்கலையாம் (பின்ன நீ கெட்ட வார்த்தைய யூஸ் பண்ணாம ஸ்டேடஸ் போட்டா தான எல்லாரும் உன்னிய மதிப்பாங்க) !!

பேஸ்புக்குல இவரு ஒரு பொண்ணுகிட்ட வம்பிழுத்துருக்காரு . அந்த பொண்ணு ஒடனே அத எல்லாருகிட்டயும் சொல்லி வருத்தபட்டுச்சு . ஒடனே ஆரம்பிச்சாரு , அந்த பொண்ண சரியா வளக்கல , அந்த பொண்ணுக்கு எப்படி பேசுறதுன்னு தெரியலன்னு . இத பாத்து கடுப்சான நம்ம பிளாக்கர்ஸ் தான் அதுக்கு அப்புறம் அந்தாள கிழிச்சு தோரணம் தொங்க விட்டுட்டாங்க . ஆனா பார்ட்டி என்னவோ சண்டைல சட்ட கிழியாத மாதிரியே மெய்ண்டெயின் பண்ணிகிட்டு இருக்குது (சொறி புடிச்ச மொன்னா நாயி , லவுட்ட பாரு

இவருக்கே இவருக்குன்னு ஒரு டிரேட்மார்க் டயலாக் இருக்குது
அது என்னான்னா “தமிழ்நாட்டுல மட்டும் தான் எழுத்தாளர்களை மதிக்க மாட்டுங்கறாங்க . இதே வெளிநாட்டுக்கு போனன்னா அங்க என்னிய ராஜா மாதிரி கொண்டாடுவாங்க” (பின்ன மஞ்ச பத்திரிக்கை சாரி புக்குக்கு எல்லாம் உனக்கு விழா எடுக்கனுமாக்கும் ??)

இவரு ஏதாச்சும் புத்தகவிழாக்கு போனாருன்னா போதும் , அந்த புத்தகத்தோட எழுத்தாளர் கூட மேடைய விட்டுட்டு 10 மைல் தள்ளி ஓடி போயிறுவாரு , அப்படி தாலியருப்பாரு . புத்தகத்த பத்தி பேச சொன்னா அங்கயும் போய் தன்னோட டிரேட்மார்க் டயலாக்க ஆரம்பிச்சுருவாரு . தமிழ்நாட்டுல எழுத்தாளர்களை மதிக்க மாட்றாங்கன்னு ஆரம்பிக்கிற அந்த பேச்சு இமயமலை , நித்தியானந்தா , ரஜினி இப்பிடி கண்ட இடத்துல சுத்திட்டு வந்து நிக்கும் . அவரயும் மதிச்சு கூப்புட்டுருக்காருல்ல ஒரு எழுத்தாளர் , அதனால கடைசி 2 நிமிசம் மட்டும் அந்த புத்தகத்த வறுத்து எடுப்பாரு . அதுவும் ஒரு புத்தகத்து ரிலீசுக்கு போன இவரு அந்த புத்தகம் புடிக்கலன்னு கிழிச்சு போட்டுட்டாரு . கேட்டா அது ஆபாசமா இருக்குதாமாம் . (அப்ப இவரு எழுதுறதுக்கு பேரு என்னா கவிதையா) . அதுக்கு அப்புறம் ஜென்மத்துக்கும் அந்த எழுத்தாளர் புத்தகம் எழுதுவாரோ மாட்டாரோ இவரு இருக்குற திசை பக்கம் தலை வச்சு கூட படுக்க மாட்டாரு . 

இவரு இவரையே ஏழை எழுத்தாளர்ன்னு சொல்லிப்பாரு . ஆனா பாத்தா வெளிநாடு எல்லாம் சுத்தி வருவாரு . எல்லா ஊருக்கும் போவாரு , எல்லா ஜாமானும் வாங்குவாரு , ஆனா கேட்டா ஒரு டயலாக் “தமிழ்நாட்டுல தான் யாரும்.............................................................”

இவரு அலும்ப தடுத்து நிறுத்த யாருமே இல்லையா ?????

டிஸ்கி : 
அந்த ஆளு அடிச்ச 50% கூத்த தான் என்னாட்டி எழுத முடிஞ்சுது , 100% போடனும்னா அப்புறம் இந்த பிளாக் 18+க்கு மட்டும்னு மாறிடும் . அது நமக்கு தேவையா , சோ இத மட்டும் வச்சு அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க

இந்த பதிவ எழுதுனது குட்டி (எ) சாகசன் ........
என்னைய பின்தொடர : @Kutty_Twits

February 17, 2012

எக்சைல் - குப்பை எக்சட்ரா ....

எ விமர்சனம் (மாதிரி) பை குணா (@g4gunaa)

எக்ஸைல்-ஆட்டோ ஃபிக்ஷனிய பின் நவீனத்துவ ஒலக இலக்கிய குப்பைக்கான விமர்சனம் (மாதிரி ;-))))

*எக்ஸைல் -லைட்டா புரிஞ்சாப்லதான் இருக்கு.. தீவிர இலக்கியத்தின் மீதான எனது திராணி கூடி விட்டதா.? அல்லது சாரு-வின் திராணி குறைந்து
விட்டதா.?

*எக்ஸைல்- பின்நவீனத்துவ இலக்கியம்..கட்டுரை..ப்ளாகுகளின் தொகுப்பு என என்ன பெயர் வேண்டுமானாலும் சொல்லுங்கள்.. ஆனா நாவல்'னு யாராச்சும் சொன்னீங்கன்னா கொரவளைய கடிச்சி துப்பிடுவேன் :-(((

*எல்லா அயிட்டங்களும் கலந்துகட்டி காக்டெயிலாக கிடைக்கும் இரண்டு இடங்கள் முனியாண்டி விலாஸ் மெனு கார்ட்; பிச்சைக்காரன் எடுத்த வாந்தி.எக்ஸைல் இரண்டாம் வகை.


*நாவலில் ஆங்காங்கே கொக்கரக்கோ அடிக்கும் கமென்ட்'களுக்கு இன்ஸ்பிரேஷன் கீச்சர்களின் அரசியல் கமெண்ட்டுகளாகத்தான் இருக்க வேண்டும். அத்தனையும் நச். நாவலில் அது ஒன்று மட்டுமே தேறுகிறது.


*என்னைபொருத்தவரை சாருவும், அண்ணன் ஜாக்கியாரும் ஒன்றுதான். ரெண்டுபேருமே மனசுக்குத் தோன்றியதை எல்லாம் தாதாயிசம் போல் எழுதுகிறார்கள். என்ன பின்னவர் எழுதுவது எனக்குக் கொஞ்சம் புரியும் ;-)))

எனது பதினோராயிரத்தி முன்னூத்தி சொச்ச ட்வீட்டுகளையும்(சாட்டிங்குகளையும் சேர்த்து- அதான் முக்கியம் ;-)))) தொகுத்து யாராச்சும் இளிச்சவாயன் புத்தகமாக வெளியிட முன்வந்தால் அதுவும் ஒரு ஆட்டோ ஃபிக்ஷனிய ஒலக இலக்கிய பின் நவீனத்துவ நாவலே ;-)))

*நாவலின் ஆறாவது க்ளைமாக்ஸ் என்று நான் ஒன்று சொந்தமாக எழுதலாம் என்றிருக்கிறேன். இப்படியே ஏழாவது, எட்டாவது... என்ன ஆயிரம் க்ளைமாக்ஸ் கூட யார் வேண்டுமானாலும் எழுதலாம். #பின்நவீனத்துவம் ;-)))

*இலக்கிய உலகின் இளையத்தளபதி சத்தியமாக சாரு'தான். கலாய்ப்பதற்காகவேணும் எக்ஸைல் மாதிரியான குப்பைகளை படித்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது ;-)))

*எதையும் சுவாரசியமாக எழுத வருகிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் எகுதலாம் என முடிவெடுத்து விட்டீரா சாரு சாரே.?

*எக்ஸைலில் இருக்க ஒரே நல்ல விஷயம் என்னன்னா, ஊடால ஊடால ஒரு நாப்பது அம்பது பக்கங்களை எலிமினேட் பண்ணிட்டு படிச்சாலும் கதையோட்டம் ஒன்னும் பாதிக்கபடுரதில்ல.. #தக்காளி.. அப்டி ஒன்னு இருந்தாத்தானே.?a

*இது விமர்சனம் மாதிரி தெரியலையே'ன்னு யாராச்சும் கேப்பீங்களே..? கேளுங்க..கேளுங்க.. நான் படிச்சது மட்டும் நாவல் மாதிரியா இருந்திச்சு.? :-(((
பப்ளிஷ்டு பை குட்டி (@Kutty_Twits)