February 17, 2012

எக்சைல் - குப்பை எக்சட்ரா ....

எ விமர்சனம் (மாதிரி) பை குணா (@g4gunaa)

எக்ஸைல்-ஆட்டோ ஃபிக்ஷனிய பின் நவீனத்துவ ஒலக இலக்கிய குப்பைக்கான விமர்சனம் (மாதிரி ;-))))

*எக்ஸைல் -லைட்டா புரிஞ்சாப்லதான் இருக்கு.. தீவிர இலக்கியத்தின் மீதான எனது திராணி கூடி விட்டதா.? அல்லது சாரு-வின் திராணி குறைந்து
விட்டதா.?

*எக்ஸைல்- பின்நவீனத்துவ இலக்கியம்..கட்டுரை..ப்ளாகுகளின் தொகுப்பு என என்ன பெயர் வேண்டுமானாலும் சொல்லுங்கள்.. ஆனா நாவல்'னு யாராச்சும் சொன்னீங்கன்னா கொரவளைய கடிச்சி துப்பிடுவேன் :-(((

*எல்லா அயிட்டங்களும் கலந்துகட்டி காக்டெயிலாக கிடைக்கும் இரண்டு இடங்கள் முனியாண்டி விலாஸ் மெனு கார்ட்; பிச்சைக்காரன் எடுத்த வாந்தி.எக்ஸைல் இரண்டாம் வகை.


*நாவலில் ஆங்காங்கே கொக்கரக்கோ அடிக்கும் கமென்ட்'களுக்கு இன்ஸ்பிரேஷன் கீச்சர்களின் அரசியல் கமெண்ட்டுகளாகத்தான் இருக்க வேண்டும். அத்தனையும் நச். நாவலில் அது ஒன்று மட்டுமே தேறுகிறது.


*என்னைபொருத்தவரை சாருவும், அண்ணன் ஜாக்கியாரும் ஒன்றுதான். ரெண்டுபேருமே மனசுக்குத் தோன்றியதை எல்லாம் தாதாயிசம் போல் எழுதுகிறார்கள். என்ன பின்னவர் எழுதுவது எனக்குக் கொஞ்சம் புரியும் ;-)))

எனது பதினோராயிரத்தி முன்னூத்தி சொச்ச ட்வீட்டுகளையும்(சாட்டிங்குகளையும் சேர்த்து- அதான் முக்கியம் ;-)))) தொகுத்து யாராச்சும் இளிச்சவாயன் புத்தகமாக வெளியிட முன்வந்தால் அதுவும் ஒரு ஆட்டோ ஃபிக்ஷனிய ஒலக இலக்கிய பின் நவீனத்துவ நாவலே ;-)))

*நாவலின் ஆறாவது க்ளைமாக்ஸ் என்று நான் ஒன்று சொந்தமாக எழுதலாம் என்றிருக்கிறேன். இப்படியே ஏழாவது, எட்டாவது... என்ன ஆயிரம் க்ளைமாக்ஸ் கூட யார் வேண்டுமானாலும் எழுதலாம். #பின்நவீனத்துவம் ;-)))

*இலக்கிய உலகின் இளையத்தளபதி சத்தியமாக சாரு'தான். கலாய்ப்பதற்காகவேணும் எக்ஸைல் மாதிரியான குப்பைகளை படித்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது ;-)))

*எதையும் சுவாரசியமாக எழுத வருகிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் எகுதலாம் என முடிவெடுத்து விட்டீரா சாரு சாரே.?

*எக்ஸைலில் இருக்க ஒரே நல்ல விஷயம் என்னன்னா, ஊடால ஊடால ஒரு நாப்பது அம்பது பக்கங்களை எலிமினேட் பண்ணிட்டு படிச்சாலும் கதையோட்டம் ஒன்னும் பாதிக்கபடுரதில்ல.. #தக்காளி.. அப்டி ஒன்னு இருந்தாத்தானே.?a

*இது விமர்சனம் மாதிரி தெரியலையே'ன்னு யாராச்சும் கேப்பீங்களே..? கேளுங்க..கேளுங்க.. நான் படிச்சது மட்டும் நாவல் மாதிரியா இருந்திச்சு.? :-(((
பப்ளிஷ்டு பை குட்டி (@Kutty_Twits)

10 comments:

  1. புத்தகப்புழுFebruary 17, 2012 at 10:01 PM

    இதற்கெல்லாம் விமர்சனம் எழுத முன்வந்த உங்களின் மனதைரியத்தை வியக்கிறேன்.(அப்புறம் பிரெஞ்ச் கவிதைகள் எல்லாம் எப்டி இருந்ததுன்னு சொல்லவே இல்லையே.நாவலின் “சாரமே” அதுலதான் இருக்காம்.சாருவே சொன்னாரு) :-))))

    ReplyDelete
  2. சாரு-வே சொல்லிட்டாரா.? எனக்கு ஃபிரெஞ்ச்சு தெரியாதுங்கற ஒரே காரணத்துக்காக அவரை மன்னிச்சி விடறேன் ;-)))

    ReplyDelete
  3. பெரும்பாலான சாருவின் 'இலக்கிய'ங்கள் கன்பியூஷியஸ்த்தனமாக இருப்பதாக கேள்விப்பட்டிருக்கேன்...நீங்கள் எப்படி சிக்கினீர்கள்?

    ReplyDelete
    Replies
    1. அங்க சொல்லியுருக்கறது மாதிரிதான்.. கலாய்ப்பதற்க்காகவேனும் வாண்டடா போய் சிக்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது ;-)))

      Delete
  4. எக்சைலை படிக்க முன்வந்த உங்கள் திராணி எனக்கு பிடித்திருக்கிறது மாம்ஸ். ஒவ்வொரு வரியும் அருமை (உங்க விமர்சனத்த சொன்னேன்) :-))

    ReplyDelete
    Replies
    1. நாமளும் எப்பதான் ஒலக இலக்கியவாதி ஆவுறது.. அதான் துணிஞ்சு களத்துல குதிச்சிட்டேன் ;-)))

      Delete
  5. எனக்கு ஃபிரெஞ்ச்சு தெரியாதுங்கற ஒரே காரணத்துக்காக அவரை மன்னிச்சி விடறேன் //

    பாத்துப்பா , சாரு மலையாளத்துல திட்டிட போறாரு , அப்புறம் ஆரம்பிச்சுருவாரு , தமிழ்நாட்டுல எனக்கு யாரும் சொம்பு தூக்க மாட்டிங்கறாங்க !!! மலையாளிங்க எல்லாம் ரொம்ப நல்லவங்கன்னு !!!

    ReplyDelete
  6. உங்க விமர்சனத்தில் லைட்டா சாரு சாயல் தெரியுது.நீங்க ஏன் ஒரு ஆட்டோஓட்டிக்கிட்டே ஃபிக்ஷன் டைப்பில் ஒரு பின்நவீனத்துவ வாந்தி எடுக்க கூடாது?நம்ம பயலுகல்ல ஒருத்தன் இலக்கியவாதியானா நமக்கும் பெருமைதான்.

    ReplyDelete
    Replies
    1. நான்வேணா மாட்டுவண்டி ஃபிக்ஷன்'லேர்ந்து ஆரம்பிக்கிறேனே.? அப்புறம் சைக்கிள் ஃபிக்ஷன்.. ரிக்ஷா ஃபிக்ஷன்.. அதுக்கப்புறமா ஆட்டோ ஃபிக்ஷன் ;-)))

      Delete
  7. @ரகு

    குணாவின் டவுசரை கிழிக்க வேண்டும் என ரொம்ப ஆசை போல ???

    ReplyDelete